பத்து வயதில் குழந்தை பெற்ற சிறுமி : தந்தையின் வெறிச்செயல்!!

317

Ab

பிரேசில் நாட்டில் பத்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் பெலொ ஹொரிஜொனிட்டி பகுதியில் பள்ளி ஒன்றில் படித்து வரும் பத்து வயது சிறுமி ஒருவர் தனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதையடித்து அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைகேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுமி குறைபிரசவத்தில் குழந்தை பெற்றதாகவும் தாயும் குழந்தையும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமியுடைய தாயின் முன்னாள் கணவரால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை பற்றி யாரிடமாவது கூறினால் தனது தாய் மற்றும் சகோதரனை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது சிறுமியை கற்பழித்ததாகவும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.