விரைவில் நிரந்தர நியமனம் வழங்க்கப்படும் !வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாத் !(படங்கள்)

1248

வவுனியா அரச சுற்றுலா விடுதியில்கடந்த  15.07.2015 அன்று  வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP  உத்தியோகத்தர்களை சந்தித்த  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச்சருமாகிய  ரிசாத் பதியுதீன் அவர்கள் விரைவில் புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர் வன்னி பட்டதாரிகளின்  வேலையில்லா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார் .

அதே போன்று முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP உத்தியோகத்தர்களுக்கும்  விரைவில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளார் .

மேற்படி சந்திப்பின் போது வவுனியா மாவட்ட பட்ட தாரிகள் சங்க தலைவரும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடமாகாண இணைப்பாளருமாகிய ம. ஆனந்தராஜா    மற்றும்  பட்டதாரிகள் சங்கத்தின்  வவுனியா வடக்கு இணைப்பாளர்கள்  பிரசாந்தன் ,சிவராஜன்  வவுனியா நகர இணைப்பாளர்கள்  சந்திரபிரகாஷ், பாலமுரளி பட்டதாரிகள் சங்க உபதலைவரும் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளருமான  க .ரஜனிகாந்த், அன்டன் ஸ்ரீதரன் ,கஜன் ஆகியோரும் CRP இணைப்பாளர்களான  தி. ரஜீவன்  ,கே. பாலமுரளி ஆகியோரும்  கலந்து கொண்டனர் .

மேற்படி சந்திப்பில் கொழும்பு பல்கலை கழக அரசியல்துறை விரிவுரையாளர் DR. அனீஸ் அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.

11694766_1116367138379480_1683237931026506401_n 11751863_1116367068379487_7684303184499997945_n (1) 11751863_1116367068379487_7684303184499997945_n 11752535_1116367081712819_1206144802989337719_n (1) 11752535_1116367081712819_1206144802989337719_n 11760152_1116367118379482_6595317574719192013_n (1) 11760152_1116367118379482_6595317574719192013_n