நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்தின் ஓர் அரங்கில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. கற்கள், போத்தல்கள் வீசப்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவினர் வருகைதந்து நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
பார்வையாளர் பகுதியில் இருந்த குழுக்களுக்கு இடையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மைதானத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமையை அடுத்தே இந்த மோதல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானிய அணி 50 ஓவர்களில் 4விக்கட்டுக்களுக்கு 316 ஓட்டங்களை பெற்றநிலையில் அந்த இலக்கை நோக்கி துடு;ப்பெடுத்தாடிய இலங்கை அணி 33 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்விக்காணும் நிலையில் இருந்தபோதே பாகிஸ்தானிய வீரர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்ற நிலையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் போட்டி தொடர்ந்து நடைபெற்றபோதும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.