ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)

476

நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்தின் ஓர் அரங்கில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. கற்கள், போத்தல்கள் வீசப்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவினர் வருகைதந்து நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

பார்வையாளர் பகுதியில் இருந்த குழுக்களுக்கு இடையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மைதானத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமையை அடுத்தே இந்த மோதல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானிய அணி 50 ஓவர்களில் 4விக்கட்டுக்களுக்கு 316 ஓட்டங்களை பெற்றநிலையில் அந்த இலக்கை நோக்கி துடு;ப்பெடுத்தாடிய இலங்கை அணி 33 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்விக்காணும் நிலையில் இருந்தபோதே பாகிஸ்தானிய வீரர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதற்ற நிலையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் போட்டி தொடர்ந்து நடைபெற்றபோதும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

11701201_739766416133678_6624228963690664045_n 11745482_739766422800344_5038872307555171444_n 11703317_739766412800345_1501658756097255217_n 11705173_739766419467011_4953694200392896969_n 11755104_739760062800980_7941816961438411715_n 11262280_739760072800979_1379519478771906429_n 11707473_739760052800981_1367737038802246791_n 11250152_10153422217657114_4919612718602911426_n pooddi_01 pooddi_03 218197 218195 218193 218185