கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!

413

metiyagoda

மீட்டியாகொடை – படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா டுபாய் நாட்டிற்கு தப்பித்துச்செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச் சம்பவத்துடன் தொடர்டைய மேலும் இருவரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.