கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!

623

Kili

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து உடல் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடைகளை வைத்து இந்த தகவல் உறுதி படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எள்ளுக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் இருந்து குறித்த உடல் எச்சங்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தை காணாமல் போனதாக கூறப்படும் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவிலுள்ள வயலிலிருந்து இந்த எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21 ஆம் திகதி காணாமற்போன குழந்தை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.