கோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்!!

259

Hen

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர்.

அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும் தீவிரவாதியின் உயிர் பறிபோகிறது. எனவே, ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலுக்கு புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். அதாவது மனிதர்களுக்கு பதிலாக கோழிகளை பயன்படுத்துகின்றனர்.

கோழிகளின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி எதிரிகள் முகாம்களுக்கு அனுப்புகின்றனர். அவை அங்கு சென்றதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்து கடும் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்.

சமீபத்தில் இது போன்ற தாக்குதல் பலூஜா நகரில் நடத்தினார்கள். இக்காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.