ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை

336

Shilpa

திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார்.

கடந்த 17ம் திகதி அதே பகுதி காணாமல் போன அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 18ம் திகதி ஷில்பா திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மருதூர் கடவு பாலம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஷில்பாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், 17ம் திகதி ஷில்பாவுடன் வெளியே சென்ற அவரது காதலர் லிஜின் தலைமறைவானதை அறிந்தனர்.

இதையடுத்து தனிப்படை அமைத்து லிஜினை தேடிய நிலையில், நேற்று காலை காட்டாக்கடையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் ஒன்றில் தனது நண்பர்களுடன் இருந்த லிஜினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.