கேரள அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் விஷால்!!

231

Vishal

நடிகர் விஷால் என்றால் எப்போதும் அதிரடி தான், தவறு நடக்கிறது என்றால் அப்படியே பொங்கி எழுந்துவிடுவார். கேரளாவில் வீதி நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள் அரசை நாடியுள்ளனர்.

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வீதிநாய்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அரசின் இந்த செயலால் மோகன்லால், லட்சுமி ராய் போன்ற பல பிரபலங்களும், பிராணிகள் நலவாரியங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேரளா அரசின் செயலை எதிர்க்கும் வகையில் இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் பிராணிகள் நலவாரியம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது.இந்த போராட்டத்தில் அதிரடி நாயகன் விஷாலும் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறாராம்.