5வது ஒருநாள் போட்டி இன்று : மலிங்க விளையாடமாட்டார்!!

241

SL

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5ஆவதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச ஒரு நாள் போட்டி ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் இரண்­டையும் பறி­கொ­டுத்­துள்ள நிலையில், இன்­றைய போட்­டியில் கள­மி­றங்கும் இலங்கை அணி இப்போட்­டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3 க்கு 2 என்ற கணக்கில் நிறைவு செய்ய கடு­மை­யாக முயற்­சிக்கும்.

கடந்த நான்கு போட்­டி­க­ளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பினும், இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை.

துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு ஆகிய சகல துறை­க­ளிலும் இலங்கை அணி மெத்தனப்­போக்­கு­ட­னேயே விளை­யா­டி­யி­ருந்­தது. இலங்கை அணியின் மத்­திய வரிசை மேலும் பல­மிக்­க­தாக அமை­ய­வேண்டும். பாரி­ய­ள­வி­லான இணைப்­பாட்­டங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

சொந்த மண்ணில் விளை­யா­டு­வதால் இலங்கை அணி இத்­தொ­டரை இல­கு­வாக கைப்­பற்­றி­விடும் என எண்­ணிய இலங்கை கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு இறு­தியில் ஏமாற்­றமே கிடைத்­தது.

அனு­பவ பந்­து­வீச்­சா­ள­ரான லசித் மலிங்க மீண்டும் தனது பழைய ஆற்றல் திற­னுக்கு வர­வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது. எனினும், அவர் இன்­றைய போட்­டியில் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது.

பாகிஸ்தான் அணி­யு­ட­னான 2 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் அவரின் பங்­க­ளிப்பு முக்­கியம் என்­பதால் அவ­ருக்கு ஓய்­வ­ளிக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, அஸார் அலி தலை­மை­யி­லான இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­யினர் மிகவும் சிறப்­பாக விளை­யாடி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்­தி­யுள்­ளனர்.

4 போட்டிகளின் நிறைவிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளமையால், இன்றைய போட்டியை உற்சாகத்துடனும் துணிச்சலுடனும் எதிர்க்கொள்ளக் காத்துள்ளது.