கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது!!

420

Kili

கிளிநொச்சி – உருத்­திரபுரம் பகு­தியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்­டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுடைய உதய குமார் யர்­ஷிகா என்ற குழந்­தையின் மர்ம மரணம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் அவ­ரது உற­வுக்­கார சகோ­தரன் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

14 வய­து­டைய மாணவன் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவரை நேற்­றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றில் பொலிஸார் ஆஜர்­ப­டுத்­தி­ய­தா­கவும் இதன் போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திக­தி­வரை அம்­மா­ண­வனை அச்­சு­வேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி குறித்த 3 வய­தான யர்­ஷிகா என்ற சிறுமி காணாமல் போயிருந்தார். வீட்­டுக்கு அருகே உள்ள குளத்தில் தாயா­ருடன் குளிக்கச் சென்ற போது மோட்டார் சைக்­கிளில் வந்த சகோ­தர உறவு முறை­யி­லான ஒரு­வரால் குளத்­துக்கு அழைத்துச் செல்லப்பட்டதா­கவும் பின்னர் தாயார் அங்கு சென்று பார்த்த போது அவர் காணாமல் போயிருந்ததா­கவும் கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு அளிக்­கப்­பட்ட முறைப்­பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்­தது.

இந் நிலை­யி­லேயே கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி குறித்த சிறுமி எலும்புக் கூடாக மீட்கப்பட்டார். யாழ். வைத்­தி­ய­சா­லையில் இது தொடர்­பி­லான மேல­திக பரி­சோ­த­னைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிறுமியை இறு­தி­யாக அழைத்துச் சென்ற சகோ­தர முறை உறவினரான 14 வயது சிறு­வனே இரு நாட்­க­ளுக்கு முன்னர் சந்­தே­கத்தில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

அச்­சி­று­வனை தடுத்து வைத்து விசா­ரணை செய்து வந்த கிளிநொச்சி பொலிஸார் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­துடன் மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசேட விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.