ரயிலில் மோதி இளைஞன் பரிதாபமாக மரணம்!!

250

acci

துவிச்­சக்­கர வண்­டியில் ரயில் கடை­வையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தை தழு­வி­யுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் நேற்று காலை நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல் லை ரயில் கடவை அருகில் இடம்­பெற்­றுள்­ளது.

பெரி­ய­முல்லை, லாஸரஸ் வீதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒரு­வரே சம்­ப­வத்தில் பலியானவ­ராவார். சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ரயில் கடவை மூடப்­பட்ட நிலையில் சம்­ப­வத்தில் மர­ண­ம­டைந்த இளைஞர் துவிச்­சக்­கர வண்டியை நிறுத்­தாது செலுத்­தி­யுள்ளார்.

இதன்­போது கொழும்பு நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த ரயி லில் மோதி பரி­தா­ப­க­ர­மாக இறந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்