ரஜினி-ஷங்கர் திடீர் சந்திப்பு..!

355

rajiniநண்பன் படத்தைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘ஐ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இந்தப் படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஐ’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர்-விஜய் மீண்டும் இணையப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார் ஷங்கர். இது கதை விவாதம் நடத்துவதற்கான சந்திப்பா அல்லது நட்பு ரீதியான சந்திப்பா என்று தெரியவில்லை.

அது மட்டும் இல்லாமல் கோச்சடையான் ட்ரைலரை ஷங்கருக்குக் காட்டுவதற்காக ரஜினி அழைத்து இருக்கலாம் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

ரஜினிகாந்த்-ஷங்கர் இணைந்த எந்திரன் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்தப் படத்திற்கு இணையான வசூலை இதுவரை வேறு எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை.

தற்போது ரஜினி-ஷங்கர் சந்தித்துள்ளது பல விதமான யூகங்களைக் கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.