யாழில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!

306

Abuse

கடற்­கரைப் பகு­தியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட சந்­தேக நபரை எதிர்­வரும் 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை மாவட்ட நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார்.

வல்­வெட்­டித்­துறை கடற்­கரைப் பகு­தியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­மியை தன்­னுடன் விளை­யாட வரு­மாறு 47 வய­தான ஆல­டியைச் சேர்ந்த கடற்­றொ­ழி­லாளர் ஒருவர் அழைத்ததாகவும் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கையில் தன் மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ததாக சிறுமி தாயா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக சிறு­மியின் தாயார் வல்­வெட்­டித்­துறைப் பொலிஸில். புகார் தெரி­வித்­ததைத் தொடர்ந்து பொலிஸார் சந்­தேக நபரைக் கைது செய்து நேற்று முன்­தி­னம பிற்­பகல் பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தினர்.

அவ்­வேளை சந்­தேக நபரை 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.அத்­துடன் குறித்த சிறு­மியை வல்வெட்டித் துறை பிரதேச வைத்தியசாலையில் பரிசோ தனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தர விட்டுள்ளார்.