இளம் பெண்ணை பின்தொடர்ந்த “அணில்” கைது: விநோத சம்பவம்!!

338

squirrel_arrest_002ஜேர்மனியில் இளம்பெண்ணை தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறைபிடித்தனர். ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள பாட்ராப் பகுதியில் பொலிசாருக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது.

தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும், உடனடியாக காப்பாற்றும்படியும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார். புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார், அணிலை கைது செய்தனர்.
அப்போது அந்த அணில் மிக சோர்வான நிலையில் இருப்பதை அறிந்த பொலிசார், உடனடியாக அணிலுக்கு தேனை ஊட்டியுள்ளனர்.