வவுனியாவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட முருகல்நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று மதியம் ஒரு மணியளவில் வவுனியாவில் சுயேட்சைக் குழு ஒன்றின் ஆதரவாளர்களுக்கும் கட்சி ஒன்றினைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியது.
இதன்போது தாக்குதலில் இருந்து தப்பிக்க முனைந்தபோது வாகனம் விபத்திற்குள்ளானதில் காயமடைந்தநிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






