வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள தருமபுரம் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாகிய கைலாய பரம்பரையை சேர்ந்த தம்பிரான் சுவாமிகள் நேற்று முன்தினம் 04.08.2015 திங்கட்கிழமையன்று விஜயம் மேற்கொண்டு சிவனடியார்களுக்கு ஆசி வழங்கினார்.
விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில் மேற்படி ஆலயத்தின் கீழ் பராமரிக்கப்படும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் முதியோர் என்பவர்கள் மிகவும் புண்ணியம் பண்ணியவர்களாகவும் ஆலயத்தின் மேற்படி செயல்பாடு அனைத்து ஆலயங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
குருமகா சந்நிதானம் அவர்கள் கோவில்குளத்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவாகும் .
மேற்படி நிகழ்வில் ஆலய பரிபாலன சபை மற்றும் இந்துகலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி பெற்றுகொண்டனர் .