ஹெலி விபத்து 16 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி!!

596

helicopter_crash_080909_2வட மேற்கு கொலம்­பி­யாவில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உலங்­கு­வா­னூர்தி விபத்தில் குறைந்­தது 16 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். அந்தப் பிராந்­தி­யத்தில் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்­டி­ருந்த உஸுகா குழுவின் தலை­வர்­களில் ஒரு­வரைக் கைது­செய்­வ­தற்கு பொலிஸார் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த உலங்­கு­வா­னூர்தி பின்­தங்­கிய அன்­தி­யோ­கு­யியா மலைப் பிராந்­தி­யத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.தாழப் பறந்த மேற்­படி உலங்­கு­வா­னூர்தி முகில் கூட்டம் கார­ண­மாக பார்வைப் புலன் தெளி­வற்ற நிலையில் மலைப் பகு­தியில் மோதி­யுள்­ள­தாக தோன்­று­வ­தாக கொலம்­பிய பாது­காப்பு அமைச்சர் லூயிஸ் கார்லொஸ் வில்­லேகாஸ் தெரி­வித்­துள்ளார்.

எனினும் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­யொன்று அந்த விமானம் தொழில்­நுட்பக் கோளாறு கார­ண­மாக விபத்­துக்­குள்­ளா­ன­தாக கூறு­கி­றது.ஆரம்­பத்தில் இந்த விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக வதந்­திகள் பர­வி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்கது.

இந்­நி­லையில் போதை­வஸ்து கடத்தல் தலை­வரை தேடிக் கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கையில் பொலி­ஸா­ருக்கு உதவும் முக­மாக ஏனைய இரு உலங்­கு­வா­னூர்­தி­களில் பயணம் செய்த கிரா­ம­வா­சிகள், அந்த உலங்­கு­வா­னூர்தி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

கடந்த வாரம் கொலம்பிய கரிபியன் கடற்கரைப் பிராந்தியத்தில் இராணுவ உலங்குவானூர்தியொன்று விபத்துக் குள்ளானதில் 11 விமானப்படை வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.