3 நாள் பயிற்சி போட்டி இன்று ஆரம்பம் : இலங்கை அணிக்கு திரிமன்ன தலைவர்!!

387

image_20130908134624விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக இலங்கை வந்­துள்­ளது.இந்­திய – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி காலி மைதா­னத்தில் தொடங்­கு­கி­றது.

இந்த டெஸ்ட் போட்­டிக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்­டத்தில் விளை­யா­டு­கி­றது இந்­திய அணி.அதன்­படி இந்­திய அணி இலங்கை கிரிக்கெட் தலைவர் லெவ­னுடன் மோதும் பயிற்சி ஆட்டம் கொழும்பில் இன்று தொடங்­கு­கி­றது.

இந்தப் போட்­டியின் இலங்கை அணிக்கு லஹிரு திரி­மான்ன அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.டெஸ்ட் தொடரில் சிறப்­பாக விளை­யாட இந்த பயிற்சி ஆட்­டத்தை இந்­திய வீரர்கள் சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ளுவர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதேபோல் இந்­திய அணியில் திற­மையை நிரூ­பிக்க கூடிய வீரர்­க­ளுக்கு தான் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இதனால் துடுப்­பாட்ட வீரர்­களும், பந்து வீச்­சா­ளர்­களும் தங்­க­ளது திற­மையை வெளிப்­ப­டுத்த கடு­மை­யாக போரா­டு­வார்கள்.



தவான், முர­ளி­விஜய், ராகுல், புஜாரா, ரோகித்­ஷர்மா ஆகியோர் தங்­க­ளது இடத்தை உறுதி செய்ய வேண்­டிய நிலையில் உள்­ளனர். வேகப்­பந்து வீச்­சா­ளர்­களில் இஷாந்த்­சர்மா, புவ­னேஷ்­வர்­குமார், வருண் ஆரோன் ஆகி­யோரில் இருவர் தான் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற இயலும். இதனால் அவர்கள் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் டுகளை வீழ்த்த போராடுவார்கள்.