கண்டெடுக்கப்பட்ட பாகம் காணமால் போன மலேசிய விமானத்தினுடையது – மலேசியப் பிரதமர் அறிவிப்பு!!

520

14625482185_cb5ca06a66_o__66.7__Proof_that_MH-17_is_MH-370_Video__Metabunk_2014-07-25_16-38-06_2014-07-25_16-38-16_RGB8__2014-07-25_16-40-10_2014-07-25_16-41-15

இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் 239 பயணிகளுடன் காணமல்போன மலேசிய எம்.எச்.370 போயிங் விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த பாகங்களை ஃப்ரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், அவை எம்எச் 370யினுடையது என “முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக” நஜீப் ரஸாக் தெரிவித்தார். புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்தில், திடீரென அந்த விமானம் மாயமானது.

அதனை, கண்டுபிடிக்கும் பணியில், சர்வதேச நாடுகள் ஈடுபட்டன. இருப்பினும், விமானத்தின் எந்த ஒரு பாகமும், கிடைக்கவில்லை. அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.



இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது.

இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இந்த சிதைவு 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் இருந்தது.

விமானத்தின் சிதைவு பாகங்கள் பிரான்ஸ் நகரமான, தொவ்லொசுவில் உள்ள அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் ஆய்வகம் வசம் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் காணமல்போன மலேசிய விமானத்தினுயைது என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.