வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 07-08-2015 வெள்ளிகிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று காலை கொடி ஏற்ற கிரியைகள் காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ நரேந்திர குருக்கள் தலைமையில் 11.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது .
மேற்படி கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனர்.
நேற்றைய மாலை உற்சவத்தில் பிற்பகல் 4.30மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ந்து அருளகம் சிறுவர்களின் பண்ணிசை இடம்பெற்று மீண்டும் 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று எட்டுமணியளவில் சிம்ம வாகனத்தில் அம்பாள் திருஉலா வந்த நிகழவும் இடம்பெற்றது .
கஜன்