பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வழிபாட்டில் சோமநாத், விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்யாநாத், நாகேஸ்வர், இராமேஸ்வரம், கிருஸ்ணேஸ்வர், பீமாசங்கர், கேதார்நாத், ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், மல்கார்ஜூன் ஆகிய 12 ஜோதி லிங்கங்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களை சேர்ந்த ஜோதி லிங்கங்களை சிவ பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசித்து வழிபட வேண்டியே இலங்கை பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ள இத் தரிசனத்தில் பாடசாலை மாணவாகள், இந்து மதத்தவர்கள் உட்பட பலரும் வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளமை குறிப்படத்தக்கது.