இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் இருந்து புராதன சிவலிங்கம் கண்டெடுப்பு!!

620

360785900siva

இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் புராதன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 80 அடி ஆழத்தில் இருந்து இந்த சிவலிங்கம் வடிவிலான புராதன பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு தட்டுகள் கொண்டு இந்த புராதன பொருள் மைந்துள்ளதாகவும் நிச்சயம் இது வரலாற்று தொடர்பு புராதன வஸ்துவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்ட இந்த சிவலிங்கம் வடிவ புராதன பொருள் தற்போது இரத்தினபுரி – வரக்காதொட்ட பகுதியில் உள்ள இரத்தினேஸ்வர சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.