வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியெறியுள்ளனர்.
கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் பிரதேசங்களில் பணியாற்றும் சிங்கள மொழியிலான பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை அறிந்து செயற்படவும் அவர்களது தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்து கொடுக்கும் முகமாகவும் இப்பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது.
இறுதி நாள் நிகழ்வின் போது தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வுக்கு வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் எச். விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அதிதியட்சகர் சமுத்திர ஜீவா, வவுனியா பொலிஸ் நிலைய கணக்கு ஆய்வாளர் எஸ். இரவிச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.