14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி : தென்னாபிரிக்கா – இலங்கை போட்டி இன்று!!

448

world-cup-netball-2015-sri-lanka

சிட்னி ஒலிம்பிக் பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 14ஆவது உலகக் கிண்ண வலை பந்­தாட்டப் போட்­டிகளில் குழு C யில் பங்­கு­பற்­றி­வரும் இலங்கை தனது கடைசி லீக் போட்­டியில் தென்னாபி­ரிக்­காவை இன்று சந்தித்தது.

இந்தப் போட்டி ஆல்ஃபோன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை நேரப்­படி இன்று காலை 8.00 மணி­ய­ளவில் ஆரம்பமாகியது.

ஏற்­க­னவே இரண்டு போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரி­டமும் மலா­வி­யி­டமும் தோல்வி அடைந்­துள்ள இலங்கை இன்­றைய போட்­டியில் தென்னாபி­ரிக்­காவை வெற்­றி­கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

மலா­விக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் இரண்டு வீராங்­க­னைகள் உபா­தைக்­குள்­ளான நிலையில் 12 வீராங்­க­னை­க­ளையும் பயிற்­றுநர் தீப்தி அல்விஸ் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சகல வீராங்­க­னை­க­ளுக்கும் அனு­ப­வத்தைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் எல்­லோ­ருக்கும் வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தாக பயிற்­றுநர் தீப்தி அல்விஸ் கூறினார். உலக வலை­ப்பந்­தாட்டத் தரப்­ப­டுத்­தலில் 5ஆம் நிலைக்கு முன்­னே­றி­யுள்ள தென்னாபி­ரிக்­காவை வீழ்த்­து­வது கடி­ன­மான விடயம். எனினும் மலா­வி­யு­ட­னான போட்­டியில் இழைக்­கப்­பட்ட தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு இந்தப் போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

முத­லி­ரண்டு போட்­டி­களில் தோல்வி அடைந்­ததன் கார­ண­மாக கடைசி எட்டு அணி­க­ளுக்­கான தரப்­ப­டுத்தல் சுற்றில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அந்த சுற்றில் சாது­ரி­யத்­துடன் விளை­யாட முயற்­சிக்கும் என பயிற்­றுநர் தெரி­வித்தார்.

இதே­வேளை நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யாவை குழு ‘ஏ’யிற்­கான தனது கடைசி லீக் போட்­டியில் நேற்று சந்­தித்த நியூ­ஸி­லாந்து 52 க்கு 47 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இதன் மூலம் கடந்த இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் அவுஸ்தி ரேலியாவிடம் அடைந்த தோல் விகளை நியூஸிலாந்து நிவர்த்தி செய்துகொண்டது.

Tags: