
வட ஆப்கானிஸ்தானை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது. இந்த பூமியதிர்ச்சி இந்திய காஷ்மீர் பிராந்தியம் வரை உணரப்பட்டுள்ளது.
இந்து குஷ்மலைப் பிராந்தியத்தில் 224 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.
சொலமன் தீவுகளுக்கு அப்பால் 6.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது.ஹொனியரா பிராந்தியத்துக்கு மேற்கே 214 கிலோமீற்றர் தொலைவில் கடலின் கீழ் மையங்கொண்டிருந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை.





