வவுனியா மாவட்ட தமிழ்க் கிராமங்களுக்கு அமைச்சர் ரிசாட் வேட்பாளர்கள் சகிதம் விஜயம்!!(படங்கள்)

863

நேற்று 11.08.2015  செவ்வாய்கிழமையன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்  வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய  கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு மக்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில்   விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .

வவுனியாவில் மகாரம்பைகுளம், காத்தார் சின்னக்குளம், மதீனா நகர் ,அரபா நகர்,  சுந்தரபுரம், சமயம்புரம், பாரதிபுரம், ஈஸ்வரிபுரம்  ஆகிய தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு  விஜயம் செய்த  அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள்   வன்னி  மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ்  போட்டியிடும்  தமிழ் வேட்பாளரான  விஜிந்தன் அவர்களை  அறிமுகம் செய்து வைத்த நிகழ்வும்  தமிழ்மக்களது ஆதரவை ஐக்கியதேசிய கட்ட்சியில் போட்டியிடும் விஜிந்தன் அவர்களுக்கு ஆதரவு வழங்கி பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது மக்களது கடமை எனவும் கேட்டுகொண்டார் .

தொடர்ந்து வவுனியா மாவட்ட தமிழ் கிராமங்களின் அபிவிருத்திக்கு  வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கமும் அதனுடைய தலைவர் திரு.ம .ஆனந்தராஜ் அவர்களும் பொறுப்பாக இருப்பதாகவும் அவருடன் இணைந்து நூறுக்கணக்கான  பட்டாதாரிகள்  ஒவ்வொரு கிராமங்களுக்கும் களமிறக்கபட்டு  தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி  சார் செயல்பாடுகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம்  வவுனியா மாவட்டத்தில்  வவுனியா நகர் பகுதி  கிராமங்கள் ,வெண்கல செட்டிகுளம் பிரதேச கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு  நெடுங்கேணி  என மூன்று பிரிவுகளிலும்  தொழில் பட்டு வருவதாகவும் தொடர்ந்தும் அவர்களினூடாக எதிர்காலத்தில்  தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் என்பன  கிராமங்களை சென்றடையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

மேற்படி மக்கள் சந்திப்பின்போது  அமைச்சரிடம் பொதுமக்கள் தங்களது  பிரச்சினைகள் தொடர்பாக வேண்டுகோள்களை முன்வைத்ததோடு அதற்குரிய தீர்வினை விரைவில் பெற்று கொடுப்பதாகவும் தெரிவித்தார் .  வன்னியின்  அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள்  வேலைவாய்ப்புகள் தொடர்பாக புதிய முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .

 நேற்றைய விஜயத்தின் போது அமைச்சருடன் வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் வேட்பாளர்  விஜிந்தன் மற்றும் வவுனியாமாவட்ட பட்டதாரிகள் சங்க தலைவர் ஆனந்தராஜா  உட்டபட  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா  வன்னிமாவட்ட  உறுப்பினர் கள்  கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலநூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

10982882_1133178623364998_9203053867374957934_n 11041191_1133172180032309_456202703881497073_n 11229548_1133179106698283_5723546698113084477_n 11822475_1133180266698167_5931437759459966893_n 11822579_1133180656698128_1845908371539922485_n 11822665_1132993810050146_1936729324325681484_n 11825093_1132993906716803_8036823650460065132_n 11825947_1132991250050402_5222011279970734846_n 11826049_1133179360031591_3209619580758727094_n 11831756_1133180563364804_3997100714913141540_n 11836720_1133179483364912_8348302560436170541_n 11855632_1133177870031740_4904542708572248714_n 11863300_1132985763384284_4202179221852437290_n 11863310_1132985720050955_1033458487960264710_n 11870947_1133179893364871_8694456956930767928_n 11873620_1133179233364937_3079187237886106620_n 11873805_1133180126698181_9117963123596714984_n 11880496_1132985826717611_1568669631132514802_n 11880556_1133177723365088_3008837809607686231_n 11880610_1133000070049520_7788874423004165641_n 11885282_1133178160031711_4285184066988681740_n