நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு!!

605

nigeria

நைஜீ­ரி­யாவின் வட கிழக்கு மாநி­ல­மான பொர்­னோவில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 47 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 52 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

வபொன் காரி நக­ரி­லுள்ள ஜெபோ கால்­நடைச் சந்­தை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­குதல் ஏற்­க­னவே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த குண்டைப் பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்­டதா அல்­லது தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ரு­வரால் நடத்­தப்­பட்­டதா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.

மேற்­படி தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த­வொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போரா­ளி­களே காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.

அந்­நாட்டின் புதிய ஜனா­தி­பதி முஹ­மது புஹாரி, மேற்­படி போராளிக் குழுவை நசுக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.