வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!

1290

Wigneswaranவட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார்.

அவர்களில் இருதய நோய் போன்ற நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து 5000 ரூபா வரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தை கிழக்கு மாகாணத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மாகாண சபை அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.