இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 253 058 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் 109 705 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பல அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வாக்களித்திருந்தனர்.
தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-பிராந்திய செய்தியாளர்-