இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது.
வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்திற்கான 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளன.
வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 63 வீத வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிகின்றன.
109705 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 69224 பேர் வாக்களித்துள்ளனர்.
அதேவேளை வன்னித் தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்..
தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்..
-வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து விசேட செய்தியாளர்-






