பாராளுமன்றதிற்கு 12 பெண் உறுப்பினர்கள் தெரிவு!!

560

Par

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் மூலம் பாராளு­மன்­றத்­துக்கு 12 பெண் உறுப்பினர்கள் மட்­டுமே தெரிவா­கி­யுள்­ளனர்.

இம்­முறை பாராளு­மன்றத் தேர்­தலில் பல்­வேறு கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில், 556 பெண் வேட்பா­ளர்கள் களமிறங்கியி­ருந்­தனர்.

ஐ.தே.க மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்­களில், 12 பேர் மட்­டுமே பாராளுமன்றத்­துக்குத் தெரி­வா­கி­யுள்­ளனர். மாவட்ட ரீதி­யாக 14 ஆச­னங்­களை வென்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்­முறை ஒரு பெண் உறுப்­பி­ன­ரேனும் தெரி­வா­க­வில்லை.

இதே­வேளை, இம்­முறை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்ட பெண் வேட்­பா­ளர்­களில், ஐக்­கிய தேசியக் கட்சியின் இரத்­தி­ன­புரி மாவட்ட வேட்­பாளர் தலதா அத்­து­கோ­ரள 145,828 விருப்பு வாக்­கு­களை பெற்று முத­லி­டத்தில் உள்ளார். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஒரு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களை பெற்ற 48 வேட்­பா­ளர்­களில் தலதா அத்­து­கோ­ர­ளவும் இடம்­பெற்­றுள்ளார்.

இரத்­தி­ன­புரி மாவட்ட வர­லாற்றில் பெண் ஒருவர் பெற்றுக் கொண்ட அதி­கூ­டிய விருப்பு வாக்கு இதுவாகும்.கடந்த முறை பாராளுமன்றத்தில் 13 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.