
இஸ்ரேலிய உளவு முகவர் நிலையமான மொஸாட்டிற்காக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்துள்ளதாக பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
அந்த டொல்பினில் புகைப்படக்கருவி உள்ளடங்கலாக உளவு பார்ப்பதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அந்த அமைப்பு கூறுகிறது.
அந்த டொல்பினுக்கு கடற்படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது காஸா துறைமுகத்துக்கு அப்பால் சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்டவேளை தமது இராணுவப் பிரிவால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.
தாம் இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த உயிருள்ள டொல்பின் முலையூட்டியைப் பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் கூறுகின்ற நிலையில், தாம் டொல்பின்களைப் பிடிப்பதற்காக டொல்பின்கள் போன்று தோற்றமளிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையே பயன்படுத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கிறது.





