ஆஸ்­தி­ரி­யாவில் கைவி­டப்­பட்ட லொறி­யி­லி­ருந்து 71 குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்கள் மீட்பு!!

641

000b0921-642ஆஸ்­தி­ரி­யாவில் ஹங்­கேரி எல்­லைக்கு அண்­மையில் நெடுஞ்­சா­லை­யொன்றில் கைவி­டப்­பட்­டி­ருந்த லொறி­யொன்­றி­லி­ருந்து 71 குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்கள் வியா­ழக்­கி­ழமை இரவு மீட்­கப்­பட்டுள்ளன.

கோழி இறைச்­சி­களை ஏற்றிச் செல்­வ­தற்குப் பயன்­படும் காற்றுப் புகாத குளிர்­சா­தன லொறி­யி­லி­ருந்தே இந்த சட­லங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அவர்கள் அனை­வரும் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனக் கருதப்படுகிறது.பலி­யா­ன­வர்கள் அனை­வரும் சிரி யப் பிர­ஜைகள் என நம்­பப்­ப­டு­கி­றது. அவர்­களில் ஒரு பாலகன், 3 சிறு­வர்கள் மற்றும் 8 பெண்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

கிழக்கு ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள பார்ன் டோர்ப் நக­ரி­லுள்ள நெடுஞ்­சா­லை ­யி­ல் காணப்பட்ட அந்த லொறி­யா­னது ஹங்­கே­ரியில் பதி­வு­செய்­ய­ப்பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அந்த லொறியின் சாரதி ரோமா­னிய பிரஜை என ஹங்­கேரி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த சாரதி சேர்­பி­யா­வி­லி­ருந்து அந்தக் குடி­யேற்­ற­வா­சி­களை லொறியில் ஏற்­றி­யி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

பய­ணத்தின்போது லொறியின் பின் கதவைத் திறந்த லொறி சாரதி, அதில் பய­ணித்த குடி­யேற்­ற­வா­சிகள் அனை­வரும் உயி­ரி­ழந்­துள்­ளதை கண்டு அச்­ச­ம­டைந்து லொறியைக் கைவிட்டு தலை­ம­றைவாகி­யி­ருக்­கலாம் என கரு­து­வ­தாக பிரா­ந்­திய பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­படி லொறியை அவ­தா­னித்த பொலிஸார் ஆரம்­பத்தில் அது இயந்­திரக் கோளாறு கார­ண­மா­கவே வீதி­யோ­ரத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக கரு­தினர்.ஆனால் பின்னர் அந்த லொறி­யி­லி­ருந்து குருதி வழிந்­தோ­டி­யி­ருப்­பதும் அதற்­குள்­ளி­ருந்து பிண வாடை வீசு­வதும் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த லொறி பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது.
இதன்­போது அந்த லொறிக்குள் பெருந்­தொ­கை­யான குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அந்த சட­லங்­களில் சில மோச­மாக அழு­கியும் ஏனைய சட­லங்கள் குறை­வாக அழு­கியும் காணப்­பட்­டுள்­ளன.மேற்­படி குடி­யேற்­ற­வா­சிகள் அனை ­வரும் ஆஸ்­தி­ரி­யா­வுக்குள் பிரவே­சிப்ப­தற்கு முன்பே உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்கள் அடை­யாளம் காண்­ப­தற்­காக வியன்­னா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.மோதல்கள் இடம்­பெற்று வரும் மத்­திய கிழக்கு மற்றும் ஆபி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து ஐரோப்­பா­வுக்கு செல்ல விரும்பும் சட்­ட­வி­ரோத குடி ­யேற்­ற­வா­சிகள் பெருந்­தொ­கையான பணத்தை கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு கட்ட ணமாக செலுத்தி எல்லையைக் கடந்து பயணங்களை மேற்கொள்வது வழமையாகவுள்ளது.

இந்த சட்டவிரோத குடியேற்றவாசி களின் மரணம் தொடர்பில் ஆஸ் திரிய அதிபர் வெர்னர் பேமான் கூறு கையில், ஆட்கடத்தல்காரர்களிடமி ருந்து மக்களின் உயிர்களைக் காப் பாற்றுவதன் அவசியம் குறித்து எச்ச ரிக்கை செய்வதாக இந்த சம்பவம் உள்ளதாக கூறினார்.

Tags: