செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..!

458

561211076Untitled-1தற்போது உலகம் முழுவதும் ´செல்பி´ மோகம் அதிகரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் ´செல்பி´ எடுத்துக்கொள்கின்றனர்.

அப்போது கட்டிளமை பருவத்தினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு ´பேன்´கள் பரவுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் நல வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற ´பேன்´ தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே ´செல்பி´ எடுக்கும் போது போட்டோவுக்கு ´போஸ்´ கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.