வவுனியா வெளிக்குளம் பகுதியில் அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ சித்தி வினாயகபெருமானது வருடாந்த மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 28.08.2015 வெள்ளிகிழமை காலை 9.00 மணியளவில் புதிதாகபலலட்சம் ரூபா செலவில் அமைக்கபட்ட 29 அடி உயரமான புதிய அழகிய சித்திர தேர் பவனி இடம்பெற்றது.
மேற்படி இரதோற்சவத்தின்போது காலை முதல் அபிசேகங்கள் மற்றும் பூஜைகள் இடம்பெற்று எட்டுமுப்பது மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து பஞ்ச முக விநாயக பெருமான் மற்றும் சண்டேஸ்வர பெருமான் ஆகியோர் உள்வீதி வந்து யாகசாலை உற்சவங்கள் நிறைவு பெற்று ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணிக்கின்ற நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பதரை மணியளவில் அழகிய சித்திர தேர் வீதி அசைந்து அசைந்து வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது .
மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் அங்கபிரதட்சினம் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர் .
வவுனியா நெற் பிரதேச நிகழ்வுகளுடன் கஜன்