போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை வடமாகாண சபைக்கு முன்பாக தனித்துப் போராட்டம் நடத்தினார்.
‘சர்வதேசமே, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்க வேண்டாம்” என்றும் ‘உள்நாட்டு விசாரணை எமக்கு நீதியை பெற்றுத்தராது” என்றும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சிவாஜிலிங்கம் வருகைதந்தார்.
எனினும் சபையின் ஏனைய உறுப்பினர்கள் அவரது போராட்டத்துக்கு ஆதரவளிக்காத நிலையில் தனித்து நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.