நால்வரை கொடூரமாக எரித்துக் கொன்று வீடியோவை வௌியிட்ட ஐ.எஸ்!!

324

267360257Untitled-1ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அந்த விடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.

குறிப்பிட்ட வீடியோவில் நான்கு பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் விடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி “ஈராக் அரசு படையினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உயிருடன் கொளுத்தினர். அதற்குப் பழி வாங்கவே இப்போது 4 பேர் எரித்துக் கொல்லப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவானது தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாக அதில் தோன்றும் தீவிரவாதி குறிப்பிட்டுள்ளார்.