எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனை நியமிக்க இணக்கம்??

491

sambanthan_7எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை நிய­மிப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகியன இணங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

17ஆம் திகதி இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் வட­கி­ழக்கில் தனித்துப் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்டு தேசியப் பட்­டியல் ஆச­னங்கள் உள்­ள­டங்­க­லாக 16ஆச­னங்­களை பெற்று மூன்­றா­வது பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்ற தரப்­பாக உரு­வெ­டுத்­தி­ருந்­தது.

அவ்­வா­றி­ருக்­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எதிர்­வரும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு தேசிய அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­வித்­த­துடன் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இந்­நி­லையில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்­பது தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்கள் வௌிவந்­த­மி­ருந்­தன. குறிப்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வான தரப்­பினர் மகிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்­டு­மென அழுத்­த­ம­ளித்­து­வந்­தன. இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ அப்­ப­தவி தனக்கு வேண்­டா­டி­மென நிரா­க­ரித்­தி­ருந்தார்.

அதே­நேரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வழங்க வேண்டும் என மக்கள் விடு­தலை முன்ணி, ஜாதிக ஹெல உறு­மய, தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட பல்­வேறு தரப்­புக்­களும் வலி­யு­றுத்தி வந்­தன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்­பதை தீர்­ம­னிக்கும் பொறுப்பை எதிர்க்­கட்­சி­க­ளி­ட­மேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைளித்­தி­ருப்­ப­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல்­வீ­ர­வன்ஸ தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு எதிர்க்­கட்சி தலைவர் பதவி தொடர்பில் பல்­வேறு இழு­ப­றிகள் தொடர்ந்த நிலையில் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் கன்னி அமர்வு நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசேட உரை­யி­னை­ய­டுத்து உரை­யாற்­றிய சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய வியா­ழக்­கி­ழமை சபை­அ­மர்வு இடம்­பெ­றும்­போது எதிர்க்­கட்சித் தலை­வரின் பெயர் உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டு­மென அறி­வித்தார்.

அவ்­வா­றி­ருக்­கையில் பாரா­ளு­மன்­றத்தின் நேற்றை கன்னி அமர்வு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்­னரும் பின்­ன­ரு­மாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கும் ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உட்­பட பல்­வேறு அர­சியல் தரப்­புக்­க­ளுக்­கி­டை­யி­லான பிரத்­தி­யேக சந்­திப்­புக்­க­ளின்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு வழங்­கு­வ­தற்கு ஏக­ம­ன­தாக இணங்­கி­யுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாதவிடத்து தனது பதவியை இராஜினாமச் செய்யவுள்ளதாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரெலோ தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.