உடல் பருமனான பெண் இராட்சத வலை மூலம் வீட்டிலிருந்து மீட்பு!!

337

america_4

இரண்­டா­வது மாடி­யி­லி­ருந்த தனது வீட்டின் வாசல் கதவு மூலம் வெளி­யேற முடி­யாது சிர­மப்­பட்ட உடல் பரு­ம­னான பெண்­ணொ­ரு­வரை தீய­ணை­ப்புப் படை­வீ­ரர்கள் பெரும் போராட்­டத்தை எதிர்­கொண்டு இராட்­சத வலை மூலம் மீட்ட சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

910 இறாத்தல் நிறை­யு­டைய மேரி போவ்மான் (70 வயது) என்ற மேற்­படி பெண், தனது உடல் பருமன் கார­ண­மாக கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து தனது வீட்டை விட்டு வெளி­யேற முடி­யாது அடை­பட்­டி­ருந்­துள்ளார்.

இந்­நி­லையில் உடல் நலம் பாதிக்­கப்­பட்ட அவரை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் செல்ல அவ­ரது குடும்­பத்­தினர் முயற்­சித்த போது, அவ­ரது உடல் வீட்டு வாசல் கதவின் அக­லத்தை விடவும் பெரி­தாக இருந்­ததால் அவரை அங்­கி­ருந்து வெளி­யேற்ற முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

இந்­நி­லையில் குடும்ப உறுப்­பி­னர்கள் உதவி கோரி அவ­ச­ர­சேவைப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து, சம்­பவ இடத்­திற்கு வந்த தீய­ணைப்புப் படை­வீ­ரர்கள் பாரந்­தூக்கி உப­க­ரணம் மற்றும் பாரிய வலை என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி அவரை அவ­ரது வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றினர். இத­னை­ய­டுத்து அவர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

இது தொடர்பில் மேரி பிறவுண் கண்­ணீ­ருடன் விப­ரிக்­கையில், தான் உயிர் வாழ விரும்புவதாகவும் அதற்காக தனது உடல் நிறையைக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.