ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் அகதிகளின் போராட்டம் அதிகரித்துள்ளது. நூற்றுக் கணக்கான அகதிகள் அங்குள்ள புகையிரத வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை வெளியேற்ற காவற்துறையினர் முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்ற போதும், இதற்கு அகதிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் குறைந்த பட்சம் ஒரு லட்சம் அகதிகளையேனும் பங்கிட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.