இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை என கவலைப்படும் கிளார்க்!!

425

clark

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு தங்கள் அணியின் துடுப்பாட்டமே காரணம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் ஏற்றுக் கொள்ள முடியாதது. பிட்ச் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது. நல்ல வாய்ப்பைத் தவறவிட்டோம். முதல் 7 பேரிடம் நல்ல அனுபவம் உள்ளது. இங்கிலாந்தின் பந்து வீச்சை ஏற்கனவே திறம்பட ஆடியுள்ளோம். ஷாட் தேர்வு படுமோசம், இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை.

அவர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட விரும்புகின்றனர். கடினமான கட்டத்திலும் விக்கெட்டை விடாமல் நிற்கின்றனர். ஆனால் முதல் இன்னிங்ஸிலேயே தோல்வி ஆரம்பமாகியது. ஆட்டத்தின் சில தருணங்களில் துடுப்பெடுத்தாட சௌகரியமாக இருக்கும் ஷாட்களை விளையாடலாம் ஆனால் பிற சமயங்கள் கடினமாக இருக்கும். அப்போது தற்காப்பு ஆட்டமே கை கொடுக்கும் இவ்வாறு கூறியுள்ளார் கிளார்க்