வவுனியா பாவற்குளம் வாரிக்குட்டியூர் 06ம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் மிக உயரமாக அமையபெற்ற (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்காண கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா நேற்றைய தினம் 07.09.2015 திங்கட்கிழமை நடத்தப்பட்டது.
சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நேற்று காலைமுதல் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கபட்டது . மேற்படி கும்பாபிசேக நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி கும்பாபிஷேக நிகழ்வில் ஐயனார் விக்கிரகத்தை அமைத்து கொடுத்த தமிழ்நாட்டு சிற்பிகள் ஆலய பரிபாலன சபையினரால் கெளரவிக்கபட்டனர் .