வவுனியா மாவட்டத்திற்கான முதலாவது சாரணர் பேடன் பவல் விருது!!

376

vav

இலங்கை சாரண தலைமைக்கரியலயத்தினால் வழங்கப்படும் திரிசாரண பிரிவின் உயர் விருதான பேடன் பவல் விருதினை வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவனுமாகிய திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இவ் விருதினை பெற்று கொண்டுள்ளதுடன்,வவுனியா மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை தேடிதந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2007 ஆம் ஆண்டு சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றார். இது கல்லூரியின் சார்பில் முதல் ஜனாதிபதி விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சாரண சார்க் நட்புறவு பாசறையிலும் எமது நாட்டை பிரதிநிதித்துவபடுத்தி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விபுலானந்த கல்லூரியின் உதவி சாரண தலைவராகவும், வவுனியா மாவட்ட ஜானதிபதி சாரணர் மன்றத்தின் தலைவராகவும், திரிசாரண உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் முதலாவது பேடன் பவல் விருதினை பெற்று கொண்ட திரு.சு.காண்டீபனுக்கு மாவட்ட சாரணர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாவட்ட ஆணையாளர் திரு M.S.பத்மநாதன் தெரிவித்தார்.