வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நல்லூரானின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 23 ஆம் நாளான நேற்று சப்பரத் திருவிழா இடம்பெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திர பாராயணங்கள் ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வயானை சமேதராய் இடப வாகனங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்த அடியார்களுக்கு அருள்புரிந்த வண்ணம் வெளி வீதியுலா வந்தார்.