வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில், சிறிசங்கர் அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பாரதியின் பெருமைகளை பறைசாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியதுடன், தமிழ்மணி அகளங்கனின் “செந்தமிழும் நாப்பழக்கம்” எனும் நூலும் வெளியிடப்பட்டது.
இவ் நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட இணைப்பாளர் திரு க,சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இவ் நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா சமூகசேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.