வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.
இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும் என்றுமில்லாதவாறு முருகப் பெருமானுக்கு பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
கடந்த வருட நல்லூர் தீர்த்தத் திருவிழாக்களின் போது, இளைஞர்கள் சிலர் வன்முறைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து ஆலய வீதிகளில் பொலிஸார் பொலிஸ் உடையிலும், சிவில் உடையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.