மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.மிக நீண்டநாட்களாக மத்தள விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான நிலையத்தை மூடிவிட தேசிய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.
அத்துடன் விமான நிலையத்தின் விமானப் பொதிகள் களஞ்சியத் தொகுதியை நெல் களஞ்சியப்படுத்துவதற்கும் பயன்படு த்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மிக நீண்ட நாட்களின் பின் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று நேற்று மத்தளயில் தரையிறங்கியுள்ளது.
லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்து கொண் டிருந்த இந்த விமானம் கால நிலை சீர்கேடு காரணமாக மத்தளயில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு தரையிறக்கப்பட்ட இந்த விமானம் அங்கிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.இந்த விமானத்தில் 244 பயணிகள் பய ணித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.





