சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது முதலாவது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுத்துள்ள சர்வதேச கூட்டமைப்பு நாடுகளின் தாக்குதல்களில் அவுஸ்திரேலியா பங்கேற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவால் சிரியாவில் நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வாகனமொன்றும் மசகு எண்ணெய் சேகரிப்பு தளமொன்றும் அழிவடைந்துள்ளன.
அவுஸ்திரேலிய விமானப் படையானது ஈராக்கிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 12 மாதங்களாக தாக்குதல்களை நடத்திவருகிறது.