சிறுமி சேயா படு­கொலை: மூவர் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை : நீலப்­ப­டங்கள் பார்ப்­ப­தற்கு, போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் என தகவல்!!

499

depressed+and+suicidalகொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்­பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் மூன்று பேர் விசேட பொலிஸ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்ள சாட்­சி­யங்­களின் படி குறித்த மூவ­ரிடம் நேற்றுமுன்தினம் மாலை முதல் விசா­ர­ணை­களை செய்து வரு­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இவ்­வாறு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வோரில் சிறுமி சேயா செதவ்­மியின் வீட்­டுக்கு அருகில் வசித்து வந்த 18 வய­து­டைய இளைஞன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள 35 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்­தையும் நடுத்­தர வய­து­டைய பிறி­தொ­ரு­வரும் அடங்­கு­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­திக்குச் சென்ற குற்றப் புல­னாய்வுப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்கள் மேல­தி­க­மாக சில சான்­று­க­ளையும் சேக­ரித்­துள்­ளது. இந் நிலையில் 6 பொலிஸ் குழுக்கள் சேர்ந்து குறித்த சிறு­மியின் கொடூர கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் தக­வல்­படி, சிறு­மியின் படு­கொலை தொடர்­பி­லான சந்­தே­க­நபர் போதைக்கு அடி­மை­யா­கி­ய­வ­ராக இருக்க வேண்டும் என்ற உறு­தி­யான தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் பிர­தான விசா­ரணை இடம்­பெற்று வரு­கின்­றது. அத்­துடன் தற்­போது பொலி­ஸாரால் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­ப­வர்கள், போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் எனவும், நீலப்­ப­டங்கள் பார்ப்­ப­தற்கும் அவர்கள் அடி­மை­யாகி இருந்­த­தாக உளவுத் தக­வல்கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விகா­ர­மான பாலியல் ஆசைகள், நட­வ­டிக்­கைகள் குறித்தும் இந்தச் சந்­தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த தக­வல்­களும் கணக்கில் கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி மேலும் குறிப்­பிட்டார். நேற்று மாலை வரை இந்த விவ­காரம் குறித்து எவரும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­க்கொடி தெரி­வித்தார்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் அவர் எவ்­வித தக­வல்­க­ளையும் தெரி­விக்க விரும்­பாத போதும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் அந் நபர்­களை விசா­ரணை செய்து வரு­வ­தாக அறிய முடி­கின்­றது. அதில் ஒருவர் சிறு­மியை தேடு­வதில் தீவி­ர­மாக செயற்­பட்­டவர் எனவும் இறுதிக் கிரி­யை­களின் போது அவர் அங்கு இருக்­க­வில்லை எனவும் குறிப்­பிடும் பொலிஸார், அந் நட­வ­டிக்­கை­களும் அவ­தா­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தனர்.

இத­னி­டையே நேற்று சிறுமி சேயா செதவ்­மியின் 7 ஆவது நாள் அமயக் கிரி­யைகள் இடம்­பெற்­றன. இதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த சிறு­மியின் தந்தை உபுல் நிஸாந்த,

தனது ஊரில் தன்­னுடன் ஒன்­றாக இருந்த ஒருவர் தனது மகளை இவ்­வாறு கொடூ­ர­மாக கொலை செய்­தி­ருக்க வேண்டும் என தான் சந்­தே­கிப்­ப­தாக தெரி­வித்தார். அத்­துடன் இந்த கொடூ­ரத்­துடன் ஒருவர் மட்­டு­மல்­லாது பலர் தொடர்­பு­பட்­டி­ருக்க வேண்டும் எனவும் தற்­போது பொலிஸ் பொறுப்பில் உள்­ள­வர்கள் தொடர்பில் தமக்கும் தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கும் பிள்­ளைகள் உள்­ளதால் அவர்கள் தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வது பொருத்­த­மற்­றது எனவும் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, மேல் மாகா­ணத்தின் வடக்குப் பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.ஜி.குல­ரத்ன ஆகி­யோரின் கட்­டுப்­பாட்டில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அபேவிக்ரமவின் ஆலோசனைக்கு அமைய மூன்று பொலிஸ் குழுக்களும் பிரதான விசாரணையினை பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய 3 சிறப்புக் குழுக்களும் முன்னெடுத்துள்ளன.