நோபல் பரிசு பெற்ற கருணையின் மறு உருவமான அன்னை தெரசாவின் உருவப்படம் அமெரிக்காவின் 10 டொலர் நோட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 10 டொலர் நோட்டில் அலெக்சாண்டர் ஹேமில்டனின் உருவப்படம் உள்ளது. அமெரிக்க கருவூலத் துறை இதை வருகிற 2020-ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஹேமில்டனின் உருவப்படத்திற்கு பதிலாக யாருடைய உருவப்படத்தை இடம்பெறச் செய்யலாம் என்பது குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களின் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இதில் 11 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தின் போது ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் ஜான் கசிச், அன்னை தெரசாவின் புகைப்படத்தை இடம்பெறச் செய்யலாம் என்று கோரிக்கை வைத்தார். தெரசா பலரது வாழ்வுக்கு உத்வேகமளிப்பவராக இருப்பதாகவும், அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.